சிறுகதைப் போட்டி
#சின்ன சின்ன ஆசை சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறி அதற்காகத்தான் நான் எழுத வேண்டும் என்று நினைத்தேன். இடையில் சின்ன சின்ன ஆசை என்பதை விட சின்ன சின்ன சோதனை ,சின்ன சின்ன வேதனை ,சின்ன சின்ன குறும்பு முதலியவற்றை எழுதலாம் என்று நினைத்தேன். என் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை நான் இங்கு எழுதலாம் என்று நினைக்கிறேன் .இது சின்ன சின்ன ஆசை யா சின்ன சின்ன வேதனையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். எனக்கு ஒரு எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கும். 63 ,64 ஆம் ஆண்டு நாங்கள் பழனியில் ஓட்டல் வைத்திருந்தோம் .அந்த நேரத்தில் அரிசித் தட்டுப்பாடு, சர்க்கரை தட்டுப்பாடு முதலியவை மிகுந்திருந்தது,1964ம் ஆண்டு பாரதப் பிரதமர் நேரு இறந்தவுடன் லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் பிரதம மந்திரியாக வந்து திங்கட்கிழமை இரவு கம்பல்சரியாக ஓட்டலை மூட வேண்டும் என்று கூறினார். தமிழ்நாட்டில் ஒருவர் எலிக்கறி தின்னலாம் என்றெல்லாம் கூறினார். அவ்வளவு உணவுத் தட்டுப்பாடு இருந்தது. உணவுத் தட்டுப்பாடை விட சர்க்கரை தட்டுப்பாடு மிகவும் அதிகமாக இருந்தது. ஏன் நான் சக்கரை தட்டுப்பாட்டை வலியுறுத்திக் கூறுகிறேன் என்றால் எனது ஒன்பது வய