நீதி தவறாத ராஜவர்மன் என்ற பாண்டிய மன்னன் கதை
தெரிந்த கதை தெரியாத வரலாறு . இன்று நாம் காண இருப்பது நீதிநெறி தவறாத ஒரு மன்னனின் கதை . யார் அந்த மன்னன்.ஏன் சோதனை ஏற்பட்டது!!?? பின்பு அது எவ்வாறு நிவர்த்தி செய்யப்பட்டது என்பதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாகக் காண்போமா??? முன்பொரு காலத்தில் மதுரையை நீதிநெறி தவறாத ராஜவர்மன் என்ற பாண்டிய மன்னன்ஆண்டு வந்தான். அவன் நீதியையும் நேர்மையையும் தன் உயிருக்கும் மேலாக மதித்து வந்தான். தன் ஆட்சியில் ஒரு சிறு தவறும் நடக்கக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக கவனம் செலுத்தி வந்தான். அவ்வாறு கவனம் செலுத்தியவனுக்கு ஆண்டவனும் அருகிலிருந்து உதவி வந்தார். அப்படியிருக்கையில் ஒரு நாள். வேறு ஒரு ஊரிலிருந்து ஒரு அந்தணரும் அவனது மனைவியும் இவனுடைய நாடு நோக்கி வந்து கொண்டிருந்தனர். வரும் வழியில் மிகவும் சோர்வாகவும் உச்சி வெயிலும் ஒரு சேர நடக்கமுடியாமல் ஒரு மரத்தின் அடியில் சற்று அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். அயர்ச்சியின் காரணமாக சற்று கண் அயர்ந்து விட்டனர் .அப்போது சற்றும் எதிர்பாராமல் ஒரு அம்பு வந்து அவனுடைய மனைவியின் மார்பைத் துளைத்தது. அக்கணமே அவர் உயிரிழந்துவிட்டார். அதே சமயத்தில் சற்ற