பரளி வாய்க்கால் அத்திக்கடவு அன்னமலை டிரிப்
மத்யமர் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .நான் ஜூலை மாதம் முடிய விடுமுறையில் உள்ளேன். எனக்கு விடுமுறை ஜூலை வரை மத்யமரில் இருந்து கிடைத்துள்ளது.நிற்க. என்பால் அன்பும் மதிப்பும் மரியாதையும் கொண்ட பல தோழர்கள் விடுமுறை முடிந்து விட்டதா?? ஏன் இன்னும் விடுமுறை முடியவில்லை?? என்று பல கேள்விகள் கேட்டு இருந்தார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த உளமார்ந்த நன்றி. நான் மத்யமரில் விடுமுறையில் இருந்த பொழுதும் கோவை மத்தியமர் நண்பர்களுடன் அடிக்கடி பேசிக் கொண்டும் அளவளாவிக் கொண்டிருந்தோம். பிறகு அனைவரும் பேசி ஒரு முடிவெடுத்து கோவை நண்பர்கள் அனைவரும் ஒரு சுற்றுலா செல்லலாம் என்று முடிவெடுத்து தலைக்கு ஆயிரம் ரூபாய் வசூல் செய்து ஃபாரஸ்ட் ஆபிஸர் பத்ராசாமி அவர்கள் தலைமையில் காரியதரிசியாக அனுராதா விஸ்வேஸ்வரன் அவர்கள் முன்னிலையில் தொழில் வல்லுனராக நானும் கேஷியராக ஐசக்கும் ரேணுகாவும் ஈடுபட 5.5.19 அன்று பயணப்பட்டோம். எங்கு எப்படி கூறுகிறேன் .கேளுங்கள். அதிகாலை 3 மணிக்கு எழுந்து அனைத்து நியமங்களையும் முடித்துவிட்டு 5 மணிக்கு பஸ் பிடித்து 6 மணிக்கு சுந்தராபுரத்திற்கு சென்றோம் .அங்கு நான் எனது மனைவி பத்ரா சாமி ர