மத்யமரில் இருந்து விலகுவது
அமைதியான நதியினிலே ஓடும். ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும். காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஓடம் .அமைதியான நதியினிலே ஓடும். அந்தியில் மயங்கி விடும் .காலையில் தெளிந்து விடும் .அன்பு மொழி கேட்டு விட்டால் பிள்ளை மனம் மாறிவிடும். அன்பு மொழி கேட்டுவிட்டால் பிள்ளை மனம் மாறிவிடும். நான் எனது சிறு வயதில் இருந்து எப்பொழுது எல்லாம் மனம் சஞ்சலப்படுகிறதோ அலைபாய்கிறதோ துன்பமுற்று இருக்கிறேனோ அப்போதெல்லாம் இந்தப் பாட்டை பாடித்தான் நான் சற்று அமைதி அடைவேன் .சாந்தி அடைவேன். அமைதி கொள்வேன். சஞ்சலமாக இருப்பதற்கு காரணம். குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் என்று கூறுவர். நான் எனது பேரன் பேத்திகளின் மழலைச் சொல்லைக் கேட்க வேண்டும். ஆதலால் சற்று விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். இது எனது இருநூறாவது பதிவு. நான் ஏற்கனவே அனைவரிடமும் கூறி இருக்கிறபடியால் 200ஆவது பதிவு பதிந்துவிட்டு நான் சற்று ஓய்வெடுக்கலாம் என்று இருக்கின்றேன். அதற்கான காரணம். 1.எனது மகன் மருமகள் பேரன் பேத்தி அமெரிக்காவில் இருந்து வருகிறார்கள். இரண்டு மாத க