எழில் அரசனைப் பற்றிக் கூறும் கதை

அனைவருக்கும் வணக்கம் .என் பெயர் வாசுதேவன். என்னையும் மத்யமரில் காணோம் என்று சிலர் பலர் தேடினார்கள். அவர்கள் தேடியதின் பலன் இன்று நான் ஒரு கதை எழுதலாம் என்று உள்ளேன். என் வாழ்வில் நடந்த உண்மையான கதை.

 அதாவது ஆண்டவன் உங்களுக்கு ஒரு பொருளை கிடைக்க வேண்டும் ,நீங்கள் தேடுவது உங்கள் கண்ணில் பட வேண்டும்," என்று விரும்பினால் மட்டுமே" மேலும் அந்த பொருளால் அந்த நபரால் உங்களுக்கு ஏதாவது நன்மை இருக்கும் என்றால் மட்டுமே "தெய்வம் அந்த பொருளை அந்த நபரை உங்கள் முன் காட்டும். இல்லையென்றால் தேவையற்றது என்று தெய்வமே ஒதுங்கி விடும் ,ஒதுக்கிவிடும்.

 மீண்டும் மீண்டும்
 நீங்கள் முயற்சி செய்தால் அந்த முயற்சியின் பலனாக தெய்வமே இவனாக புரிந்து கொள்ளட்டும் பட்டுத்தான் திருந்துவான் என்று அவன் கண்ணில் காணிக்கும். என்னடா புதிர் போடுகிறானே என்று பார்க்கிறீர்களா??!! இனிதான் கதையே ஆரம்பம்.

 நான் ஏர்போர்ஸ்ல் இருந்த காலத்தில் நகமும் சதையுமாக எலும்பும் தோலுமாக உயிருக்குயிரான ஒரு நண்பன் இருந்தான். பிறகு ஏர்போர்ஸை விட்டு வெளியே வந்தவுடன் எங்கள் நட்பு பிரிந்தது .அவன் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை. நான் கடந்த 35 வருடங்களாக அவனை தேடி தேடி அலுத்து சலித்து சோர்வுற்று போய்விட்டேன். மாயவரத்தில் அருகிலுள்ள குத்தாலத்தில் அவனின் வீடு இருக்கிறது. பலமுறை பலரிடம் சொல்லி சென்று பார்த்து அவன் கண்களில் தென்படவே இல்லை. சரி இது தெய்வத்தின் சங்கல்பம் என்று விட்டுவிட்டேன்.

 அதாவது சிஷ்யன் ஒருவன் குருவிடம் தோட்டத்தில் அமர்ந்திருக்கும் பொழுது நிறைய பட்டாம் பூச்சி பறந்துகொண்டிருந்தது .அப்பொழுது சிஷ்யன் குருவிடம் நான் சில பட்டாம் பூச்சிகளைப் பிடிக்க விரும்புகிறேன் என்று கூறினார். குருவும் உன் விருப்பம் போல் செய் என்று கூறினார். பல மணி நேரமாக முயற்சி செய்தும் ஒரு பட்டாம்பூச்சியையும் பிடிக்க முடியவில்லை. சோர்ந்து மனம் வருந்தி குருவிடம் என்னால் முடியவில்லை நான் தோற்று விட்டேன் என்று கூறினார். உடனே குரு மனதை அமைதிப்படுத்து.சற்று நேரம் அமைதியாக அங்கு அமர்ந்து  இரு என்று கூறினார். இவனும் அதுபோல் செய்தான் .பத்து நிமிடத்தில் பட்டாம்பூச்சிகள் வந்து அவன் தோள் மீதும் மார் மீதும் அமர்ந்தது. அதைக் கண்டு அவன் ஆனந்தம் அடைந்தான். அப்போது குரு கூறினார். எதையும் தேடினால் கிடைக்காது. அமைதியாக இருந்தால் தன்னால் தேடி வரும் என்று கூறினார். அதுபோல் தான் என் வாழ்விலும் நிகழ்ந்தது. ஆனால்ஏன் நிகழ்ந்தது என்று தான் இப்பொழுது வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறேன் .

அதாவது நான் தேடிய என் நண்பன் 20 நாட்கள் முன்பு என்னைக் கண்டுபிடித்து விட்டான் .நானும் கண்டுபிடித்து முப்பத்தைந்து வருட அனுபவங்களை பேசினோம் .அவன் தனது வாழ்வின் அனுபவங்களை கூறினான் .ஏண்டா? இவனை கண்டோம்! என்று எனக்கு மனதில் தோன்றியது .காரணம் அவன் மனைவி அவனுடைய கொடுமை தாங்காமல் இறந்து விட்டார். இவனுடைய துன்புறுத்தல் தாங்காமல் தந்தை மரித்துவிட்டார். தாய் பலமுறை  இவனைப் பற்றி போலீசில் கம்பளைண்ட் செய்தும் ஒன்றும் செய்ய முடியாத காரணத்தினால் வீட்டை விட்டு போய் விட்டார் .தம்பி தங்கைகள் இவன் டார்ச்சரால் மனம் நொந்து பல உளைச்சலுக்கு ஆளாகி பல இடங்களில் பிரிந்து சென்றுவிட்டார்கள். பெற்ற பெண்ணும் மகனுமே இவனிடம் இருந்து ஒதுங்கி இருக்கிறார்கள். இத்தகைய ஒரு கொடுமைக்காரனயா நாம் தேடிக் கொண்டிருந்தோம் என்று மனம் சஞ்சலப் படுகிறது. ஆனால் உண்மையில் 35 வருடங்களுக்கு முன்பு அவன் மிகவும் நல்லவனாக தான் இருந்தான். காலப்போக்கில் சூழ்நிலைகள் அவனை மாற்றிவிட்டது.  ஏர்போர்ஸை விட்டு வெளியே வந்தவுடன் நான் இன்சூரன்ஸ் கம்பெனியில் சேர்ந்து விட்டேன் .அவன் எங்கும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே அமர்ந்து கொண்டு தாய் தந்தையரின் பணத்தில் சாப்பிட்ட காரணத்தினால் உடம்பில் சோம்பேறித்தனம் ஏறி அனைவரையும் துன்புறுத்தத் தொடங்கினான் என்று நாளடைவில் தெரிந்து கொண்டேன். இப்பொழுது புரிந்ததா நண்பர்களே!!?? ஆண்டவன் ஏன் ஒரு பொருளை கண்ணில் காண்பிக்கவில்லை என்று !!முன்பே காண்பித்து இருந்தால் ஒருவேளை நான் அவனைத் திருத்தி இருக்கலாம். இல்லை இது தான் விதி என்று விட்டு விட்டு வந்திருக்கலாம். ஆண்டவன் எது செய்தாலும் நன்மைக்கே .

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ