கொரோணா ஊசி போட்டு கொண்டோம்
இன்று நானும் என் மனைவியும் குடிலில் தங்கியுள்ள சிலருடன் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஆதார் கார்டை கொடுத்து மொபைல் நம்பரை எழுதி அவர்கள் கொடுத்த பேப்பரில் பெயரை எழுதி கையொப்பமிட்டு 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் என்று நிரூபித்து கொராணா இன்ஜெக்ஷன் போட்டுக் கொண்டோம்.
பிறகு சைட் எஃபெக்ட் உள்ளதா என்பதை அறிய அரைமணி நேரம் அங்கு அமரச் சொன்னார்கள்.அரைமணி நேரம் கழித்து ஒன்றுமில்லை என்ற உடன் சென்று வாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார்கள். நாங்கள் வெளியில் வந்து வெயில் உக்கிரமாக இருந்த காரணத்தினால் ஒரு கரும்பு சாறு அருந்தி வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். நன்றி
Comments
Post a Comment