கோவலன் கண்ணகி முற்பிறவி

தெரிந்த கதை தெரியாத வரலாறு.

இன்று நாம் காண இருப்பது கோவலன் கண்ணகி ,பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுடைய முந்தைய வரலாறு. ஏன் கோவலன் கொல்லப்பட்டான்?!. கண்ணகி ஏன் பழிவாங்கினாள்???நெடுஞ்செழிய மன்னன் ஏன்  மரணமடைந்தார்??!  என்பதைத் தெரிந்து கொள்ள  அவர்களுடைய முந்தைய வரலாற்றை சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா??!..

கோவலன் கண்ணகியை மணக்கிறான். மாதவியின் வீட்டிற்கும் செல்வான். நிலைமை மோசமாக பஞ்சத்தில் அடிபட்டு திருந்தி கண்ணகியிடம் வந்து சிலம்பை வாங்கிக்கொண்டு மதுரை மாநகரில் விற்கச் செல்ல அங்கு உள்ள பொற்கொல்லன்  மன்னன் மனைவி சிலம்பு திருடு போன காரணத்தால் இவன்தான் திருடன் என்று சொல்லிக் கொண்டு மன்னரிடம் கொண்டு போக நீதி விசாரணை சரியாக நடக்காமல் கொலைக்களத்திற்கு அனுப்பிவிடு என்று பாண்டிய மன்னன் கூற அவன் கொலையுற அது கேட்டு வெகுண்டெழுந்த கண்ணகி தன்னுடைய சிலம்புடன் நேராக பாண்டிய மன்னன் அரசவைக்கு சென்று,,

தேரா மன்னா! செப்புவது உடையேன் ,எள்ளறு சிறப்பின் இயம்பவர் வியப்பப்  புல்லறு  புண் கண் தீர்த்தோன் அன்றியும், வாயிற் கடைமணி நடுநா நடுங்க, ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுடத் தாம் தம் அரும்பெறுற் புதல்வனை ஆழியில் மடித்தோன். (பத்தாவதில் படித்த மனப்பாடம் செய்யுள்  இன்றும் ஞாபகம் இருக்கிறது) என்று கூற அது கேட்டு உண்மை நிலையை ஆராய்ந்து யானோ அரசன்!! யானே கள்வன்??!! என்று கூறி பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் வேரற்றமரம் போல் அப்படியே சாய்ந்து விழுந்தான். அக்கணமே அவன் உயிர் பிரிந்தது. அதுகண்டு ராணியும் தலைவன் உயிர் விட தான் வாழ்வதோ என்று அவளும் அக்கணமே உயிர்நீத்தாள், என்பது வரை அனைவரும் அறிந்த ஒன்று. இனி அறியாத கதை .ஏன்? இவ்வாறு நடந்தது! இதற்கு என்ன காரணம் என்பது பற்றி இவர்களுடைய முற்பிறவியில் நடந்ததை கூறினால் இந்நிகழ்ச்சியை சீர்செய்ய ஏதுவாகும். முற்பிறவிக்கு  செல்வோமா..!!??

கபில புரம் என்றொரு ஊர் .அவ்வூரில் சங்கமன் என்ற வியாபாரி வசித்து வந்தான் .அவன் நேர்மையை கடைப்பிடிப்பவன் அவனது  மனைவி  பெயர் நீலி.கணவன் சொல் தட்டாத பதிவிரதை . அவர்கள் வசித்த ஊருக்கு அருகிலுள்ள சிங்கபுரம் என்ற ஊருக்கு வியாபாரிகள் தவிர மற்றவர்கள் செல்லக்கூடாது என்று அந்த ஊர் அரசனால் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஒருமுறை சங்கமன் அந்த ஊரில் வியாபாரத்திற்காக சென்றான் .அப்பொழுது அவ்வூரில் அவனது போட்டி வியாபாரியான பரதன் என்பவன் சங்கமனைப் பார்த்தான்.போட்டி பொறாமை காரணமாக அவனைக் கண்டவுடன் அவனுக்கு கெடுதல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பரதனின் மனதில் தோன்றியது. அதனால் அவன் அரசரிடம் சென்று சங்கமன் என்பவன் ஒற்றன். கபிலபுரத்திலிருந்து வேவுபார்க்க வந்துள்ளான். அவனைப் பிடித்து  சிறையில் அடையுங்கள் என்று  கூறினான்.

அரசனும் பரதன் கூறியதைக் கேட்டு என்ன ஏது என்று தீர விசாரியாமல் சங்கமனை ஒற்றன் என்று நினைத்து கொலைக்ளத்திற்கு அனுப்பி அவனை கொன்று விட்டான். இதுகேட்டு சங்கமன் மனைவி  நீலி மிகவும் அதிர்ச்சியடைந்து மனம் கொதித்து அரசனை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாத காரணத்தினால் எனக்கு நீதி தவறி யார் துன்பம் விளைவித்தார்களோ அவர்கள் அடுத்த பிறவியில்   இதே துன்பத்தை அடைவார்கள் என்று சாபமிட்டு இறந்து போனாள்.பத்தினி சாபம் பலிக்காமல் இருக்குமா.!!?

மறுபிறவியில்  சங்கமன் மரணத்திற்கு காரணமான பரதன் கோவலனாகவும் அவன் மனைவி கண்ணகியாகவும் பிறந்தனர். கோவலன் கொல்லப்பட்டான் .கண்ணகி கொதித்தெழுந்தாள்.தவறாக தீர்ப்பளித்த  மன்னன் நெடுஞ்செழியன் ஆகவும் அவன் மனைவி கோப்பெருந்தேவியாகவும் பிறந்தனர். கண்ணகியின் கூற்றைக் கேட்டு நெடுஞ்செழியனும் அவன் மனைவியும் அக்கணமே உயிர்விட்டனர் .இதிலிருந்து எந்த ஜென்மத்திலும் யாருக்கும் எத்தகையதொரு துன்பமும் செய்யக் கூடாது என்பதை நாம் அனைவரும் நினைவில் நிறுத்தி நல்லதே செய்தால் அனைவருக்கும் என்றும் நன்மையே நடக்கும் என்று கூறி இதுவே கண்ணகி கோவலனுடைய முந்திய வரலாறு என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி.

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.

Comments

  1. மிக்க நன்றி ஐயா - சங்கமன் கதை அறிந்தேன். தங்களின் இலக்கிய உதவிக்கு மிகவும் நன்றியுடைத்தேன் .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்