திருக்குறள் தோன்றிய வரலாறு

தெரிந்த கதை தெரியாத வரலாறு.

இதுவரை நாம் பல கோயில்களின் தலவரலாறு .கோயில் உருவான விதம். நதி கடல்  மலை உருவான விதம் அனைத்தையும் பார்த்தோம்.

முதன்முதலாக திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் திருக்குறளை இயற்றிய காரணம் நோக்கம் ஏன் இயற்றினார் என்பதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா.!!!??

திருவள்ளுவர் வாழ்ந்த இடம் சென்னையில் உள்ள மயிலாப்பூர். ஒரு நாள் தமது குடிலின் வாசல் திண்ணையில் அமர்ந்தபடி யோசனையில் ஆழ்ந்திருந்தார் .அவர் அருகில் ஓலைச்சுவடிகள் எழுத்தாணியின்  கூரற்ற முனை முதலியவை இருந்தது .அவற்றையும் ஓலைச்சுவடிகளையும் பார்த்துக்கொண்டு மிகுந்த யோசனையில் ஆழ்ந்திருந்தார் .அப்போது அவர் மனைவி வாசுகி வந்து என்ன யோசனையில் இருக்கிறீர்கள் என்று வினவினார் .அதற்கு உடனே திருவள்ளுவர் மனித வாழ்க்கையின் எல்லா கூறுகளையும் உள்ளடக்கிய ஒரு நீதி நூல் எழுதலாம் என்று ஆலோசித்துக் கொண்டு இருக்கிறேன் என்று கூறினார்.

அதற்கு அவர் மனைவி எழுதுங்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டும் .காரணம் நாட்டில் நீதி நூல்கள் ஆயிரம் இருக்கின்றன. அதை யாரும் படிப்பதில்லை என்று கூறினார்.அதைக் கேட்ட திருவள்ளுவர் ஆதலால்தான் எளிய செய்யுள் வடிவில் அதுவும் ஒவ்வொரு செயலுமே ஒன்னே முக்கால் அடி நீளத்தில் இருக்கும் படி எழுதலாம் என்று நினைக்கிறேன் என்று கூறினார்.

அதுகேட்ட வாசுகி அருமை குறுகிய பா என்றால் படிக்கத் தூண்டுவதாக இருக்கும் என்று கூறினார் .உடனே வள்ளுவர் குறுகிய பா வா அருமையான சொற்றொடர் .என் நூலுக்கு குறுகிய பா அதாவது குறட்பா என்று பெயர் வைத்து விடுகிறேன் .அதையும் சுருக்கி குறள் என்று வைத்து விடுகிறேன் என்று கூறினார்.உடனே அவர் மனைவி மங்களகரமாக இருக்கட்டும் வெறும் குறள் என்று வேண்டாம் திருக்குறள் என்று வையுங்கள் என்று கூறினார். மனைவி சொல்லே மந்திரம் என்று உணர்ந்து தான் எழுதப்போகும் நூலுக்கு திருக்குறள் என்று பெயர் வைத்தார் .அது மட்டுமல்லாமல்

திருக்குறள் என்பது மிகவும் பொருத்தமான பெயர். காரணம் மகாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தை வைணவர்கள் திருக்குறளப்பன் என்று குறிப்பிடுவார்கள் .சிறிய உருவமாக தோன்றி மூவுலகையும் அளந்து விஸ்வரூபத்தைக் காட்டியவர் வாமனர். அதுபோல் என்னுடைய குறளும் நீளம் குறைவாக இருந்தாலும் தோண்டத் தோண்ட ஆழமான பொருளைத் தரும் செய்யுலாக அமையும் என்று கூறினார்.

உடனே அவர் மனைவி இதை எவ்வாறு அமைக்க போகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு வள்ளுவர் மனித வாழ்வில் அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கு கருப் பொருட்கள் உள்ளன .அந்த நாலையும் குறுகிய நேரத்துக்குள் அமைப்பது போல் மூன்று பொருட்களையும் சுருக்கமாகவும் விளக்கமாகவும் கூறுவதாக இருக்கிறேன் என்று கூறினார் .உடனே அவர்  மனைவி  நாலு என்று கூறிவிட்டு மூன்று என்று கூறுகிறேர்களே என்று கேட்டார். அதற்கு அறம் பொருள் இன்பம் வீடு என்பது. ஆனால் வீடுபேற்றை அடைவதற்காகவே இந்த மூன்றையும் நாம் மேற்கொள்கிறோம் .ஆதலால் அறவழியில் நடந்து பொருளீட்டி முறையாக இன்பம் துய்த்தால் வீடுபேறு ஒருவனுக்குத் தன்னால் கிட்டும். வீடுபேறு பெறவேண்டும் என்பதற்காக தனியாக முயற்சி செய்ய வேண்டியதில்லை என்ற கருத்தை மறைபொருளாக கொண்டு நான் அறத்துப் பால் பொருட் பால் காமத்துப்பால் என்ற இந்த மூன்றை முறையாக மூன்று பிரிவுகளாக பிரிக்க போகிறேன் என்று கூறினார்.

அப்படியானால் ஏற்கனவே நூலை வடிவமைத்து விட்டீர்களா என்று கேட்டதற்கு ஆம் என்னென்ன தலைப்புகள் எழுத வேண்டும் என்று சிந்தித்து 133 தலைப்புகளை தேர்ந்தெடுத்து அவற்றை இந்த ஓலைச் சுவடியில் குறித்து வைத்துள்ளேன். ஒவ்வொரு தலைப்புக்கும் பத்துப்பாட்டு வீதம் 133 தலைப்புகளுக்கு மாகச் சேர்ந்து 1330 பாட்டுக்கள் எழுதவும் நான் முடிவு செய்துள்ளேன் என்று கூறினார்.

உடனே அவர் மனைவி  எல்லாம் சரி. காமத்துப்பாலை வடிவமைக்கும் போதாவது என்னுடைய கருத்துக்களை கேட்டு இருக்கலாமே என்று வினவினார்.நீ அதற்காக கோபித்துக் கொள்ள வேண்டாம் .நமக்குள் நடக்கும் ஊடலைப் பற்றிக்  கூட எழுதப் போகிறேன். உன்னிடம் கற்றுக் கொண்டதன் அடிப்படையில் தான் அதிகாரங்களை அமைத்திருக்கிறேன் .குறள்களை எழுதும் போது நிச்சயம் உனது சிந்தனைகள் எனக்குத் தேவைப்படும். காமத்துப்பால் மட்டுமல்ல மற்ற இரண்டு பால்களைப் பற்றி எழுதும்போதும் உன்னுடைய கருத்துக்களை நிச்சயம் கேட்டுக்கொள்வேன். அதுமட்டுமல்ல ஊடல் கொண்ட மனைவியை எவ்வாறு அமைதிப்படுத்துவது என்பதையும் விபரமாக உன்னைக் கேட்டு அனைவருக்கும் தெரிவிக்கிறேன். மேலும் முதல் குறளை எழுதுவதற்கும் உன்னுடைய உதவி தான் எனக்கு வேண்டும் என்று கூறினார்.

அது கேட்ட அவர் மனைவி முதல் குறள் கடவுளை பற்றியது தானே கடவுள் வாழ்த்து தானே என்று கேட்டார்.கடவுள் வாழ்த்து தான் .ஆனால் குறிப்பாக எந்தக் கடவுளைப் பற்றியும் நான் குறிப்பிடப் போவது இல்லை .பொதுவான கடவுளைப் பற்றியதாகத்தான் இருக்கும். யார் படித்தாலும் தாங்கள் வழிபடும் கடவுளைத் தான் இந்த நூல் குறிக்கின்றது என்று நினைக்கும் விதமாக பொதுவாக கடவுள்களின் தன்மையைப்  பற்றித்தான் எழுதப் போகிறேன் .ஆனால் முதல் செய்யுளில் ஒரு சிக்கல் உள்ளது என்று கூறினார். என்ன சிக்கல் என்று வினவியதற்கு

பொதுவாக தமிழ்க் காப்பியங்கள் உலகு என்ற சொல்லுடன் துவங்குவதுதான் மரபு. ஆனால் உலகு என்று ஆரம்பித்தால் அதை  எப்படி தொடர்ந்து எழுதுவது என்று புரியவில்லை என்று கூறினார். உடனே அவர் மனைவியும் உலகு என்ற வார்த்தை இருந்தால் போதும் அல்லவா !!??அதில் முதல் சொல்லாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை அல்லவா என்று கூறினார் .அதுகேட்ட திருவள்ளுவர் மிகவும் மகிழ்ந்து நீ சொல்வது சரிதான். கடவுளையும் இவ்வுலகையும் தொடர்பு படுத்தி எழுத வேண்டும் .எனக்கு சரியான கருத்து கிடைக்கவில்லை என்று கூறினார்.

உடனே அவர் மனைவி நான் நேற்று மயிலை கபாலீஸ்வரர் கோவில் சென்று வந்தேன். அங்கு ஒருவர் உபன்யாசம் செய்து கொண்டிருந்தார்.அது என்னவென்றால் நாரதர் சிவபெருமானிடம் ஒரு மாம்பழம் கொடுத்தாராம் .அதை யாருக்கு கொடுப்பது என்று போட்டி. உடனே உலகை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு தான் இந்த பழம் என்றாராம் சிவபெருமான் .முருகன் மயில் மீது ஏறி உலகை சுற்றி வருவதற்குள் விநாயகர் அப்பா அம்மாவை வலம் வந்து பழத்தைப் பெற்றுக் கொண்டாராம். அதுமட்டுமல்லாமல் பெற்றோர் தான் உலகம் என்று முருகனுக்கு உணர்த்தினாராம் என்று வாசுகி திருவள்ளுவரிடம் கூறினார்.

அருமையான சுவாரசியமான கதை. அப்படி என்றால் பெற்றோர்தான் உலகம். இவ்வுலகை படைத்தவரே பெற்றோராகிய கடவுள்தான். ஆதலால் அவர்களை ஆதிபகவன் என்று கூறலாம். ஆதி பகவன் முதற்றே உலகு ஆதிபகவன் முதற்றே உலகு என்றால் இவ்வுலகம் அமைவதற்கான காரணம் என்றும் கொள்ளலாம் .ஆதி என்ற பெயரை பெண் பெயராக கொண்டாலும் ஆண் பெண் என்ற இரு உருவில் அமைந்த கடவுள் என்றும் கொள்ளலாம் .ஆதி பகவன் முதற்றே உலகு என்பதை குறளின் பின் பகுதியாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் குறளின் முன்பகுதியை எப்படித் துவங்குவது என்று வினவினார்.

உடனே அவர் மனைவி எழுத்துக்கள் அ என்று தானே தொடங்குகிறது. அம்மா அப்பா அனைத்தும் அ வில் தானே துவங்குகிறது .ஆகவே உங்கள் முதல் குறளையும் அ விலேயே துவங்குங்கள் என்று கூறினார்.

அருமையான யோசனை . அ என்றால் அகரம் .ஆகவே நான் முதலெழுத்தாக அகர முதல எழுத்தெல்லாம் என்றும் பகவானையும் உலகையும் இணைத்து ஆதி பகவன் முதற்றே உலகு என்றும் அமைக்கிறேன் இப்பொழுது முதல் குறளை  கூறுகிறேன் சரியாக இருக்கா என்று பார் என்று கூறினார்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

இக்குறளை அரும்பாடு பட்டு  எழுதிவிட்டு அருமை வாசுகி அருமை .எனக்கு முதலடியும் கடைசி அடியும் அனைத்தும் எடுத்துக் கொடுத்து முதல் குறளைஅமைத்தது நீயே தான். உனக்கு என் வாழ்த்துக்கள் என்று கூறி திருவள்ளுவர் வாசுகியை வாழ்த்தினார்.

இவ்வாறுதான் முதல் குறளும் பாக்கியுள்ள அனைத்து குறளும் தோன்றின .

திருக்குறள் இவ்வாறு  தான்தோன்றியது என்பதைக் கூறி இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி என்று கூறிக் கொள்கிறேன்.

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.

Comments

  1. கற்பனை கதை...என்பதை தவிர இதில் உண்மை இருப்பதற்கான முகாந்திரமே இல்லை

    ReplyDelete
    Replies
    1. கற்பனை கதை அல்ல.தெரியாமல் பேசாதே

      Delete
  2. அழகாகக் கதைத்து இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  3. கதை விட த்தெரிந்தவன். வரலாறு மாற்றுவது இதுபோன்ற, முட்,டாளால் தான்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்