மூகாம்பிகை கோயில் வரலாறு
தெரிந்த கதை தெரியாத வரலாறு
இன்று நாம் காண இருப்பது கொல்லூர் மூகாம்பிகை. இந்த ஆலயம் எவ்வாறு தோன்றியது. இதன் சரித்திர பின்னணி என்ன எல்லாவற்றையும் சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா!!!??
இது கர்நாடகாவில் உள்ள ஏழு முக்தி தலங்களில் ஒன்று .1.உடுப்பி 2.சுப்பிரமணியா.3. கும்ப காசி 4. கோடேச்வரா.5. க்ரோட சங்கரநாராயணா.6. கோகர்ணம் 7. மூகாம்பிகை. இவை ஏழும் ஏழு முக்தித் தலங்கள் ஆகும்.
இத்தளத்திற்கு வேறு பல பெயர்கள் உண்டு"" மூகாம்பாபுரி"" என்றும்"" கோலாபுரம்"' என்றும் அது நாளடைவில் மருவி"" கொல்லூரு "" என்றும் ""கொல்லூர்"" என்றும் பல பெயர்கள் உண்டு.
இக்கோயிலின் மகிமை பற்றி ஸ்கந்தபுராணத்தில் உள்ளது .அங்குள்ள சுயம்புலிங்கத்தில் சக்கர வடிவத்தில் பரப்பிரம்ம சொரூபியான பராசக்தி சகல தேவதைகளுடன் எழுந்தருளியுள்ளதாக சிவபெருமான் முருகனுக்கு விளக்குவதாகவும் அதைக்கேட்ட முருகன் பரதேவதையை வழிபட அத்தலத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது..
இனி இக்கோயில் தோன்றிய விவரத்தை பார்ப்போம். கிருதயுகத்தில் இக்கோயிலுக்கு மகாராண்யபுரம் என்றும் பெயர்.இங்கு சித்தர்களும் முனிவர்களும் தவமியற்றி வந்தார்கள். அவர்களில் முக்கியமானவர் கோல மகரிஷி. அவரின் பெயராலேயே இத்தலம் கோலாபுரி என்றும் அழைக்கப்படுகிறது. மக்களின் நன்மைக்காக ஆயிரம் ஆண்டுகள் தவம் இருந்த உடன் சிவபெருமான் அவருக்கு காட்சி தந்து அவருக்கு வேண்டிய வரங்களை அளித்து பராசக்தியை குறித்து தவமியற்றும் படி கூறிவிட்டு மறைந்தார். பராசக்தியை வழிபட்டு வரும் போது ஒருநாள் காட்டின் நடுவில் சுயம்புலிங்கம் தோன்றியதை கண்டு ஆனந்தித்து நிர்குண சமாதியில் வீழ்ந்தார்.
அச்சமயத்தில் காமாசுரன் எனற அசுரன் பராசக்தியை வழிபட்டு பல சக்திகளைப் பெற்று கோலாபுரியைத் தலைநகராகக்கொண்டு பெரிய சாம்ராஜ்யத்தை நிறுவினான். அவனது கொடுமையை கண்டு நடுங்கிய தேவர்கள் கோலமஹரிஷியுடன் சேர்ந்து அவர்களும் அம்பிகையை நோக்கி தவமிருந்தனர் . அப்போது அம்பிகை அவர்களுக்கு தரிசனம் தந்து அபயம் அளிக்கவே அதைக் கேள்வியுற்ற காமாசுரன் ரிஷ்யமுக பர்வதத்திற்குச் சென்று சிவபெருமானை குறித்து கடும் தவத்தில் ஆழ்ந்தான்.
அவன் தவத்தைக் கண்டு பயந்த தேவர்கள் உடனே பராசக்தியிடம் தாயே அவன் சிவபெருமானைக் குறித்து தவம் இயற்றுகிறான். சிவபெருமான் அவன் தவத்தை மெச்சி அவனுக்கு சாகாவரம் கொடுத்துவிட்டால் எங்கள் நிலைமை என்ன ஆவது.??. ஆகவே தாங்கள் அவனை வாய்பேசாத ஊமை ஆக்கிவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள்.உடனே பராசக்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி வாய் பேசமுடியாத மூகா வாக ஆக்கினாள் ( மூகா=ஊமை மூகாசுரன் =வாய் பேச முடியாத ஊமை அசுரன்) அன்றிலிருந்து அவனுக்கு மூகாசுரன் என்று பெயர் வந்தது.
அதற்குப் பிறகும் அவன் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்த தேவர்கள் அனைவரும் பராசக்தியிடம் முறையிட பராசக்தி மூகாசுரனை வதம் செய்தாள் .அவன் இறக்கும் பொழுது தன்னுடைய ஆனவத்திற்காக வருந்தி மன்னிப்பு கேட்டு பக்தர்களுக்கு வரம் அளிப்பதற்காக அம்பாள் அங்கேயே எழுந்தருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டான் .அன்றிலிருந்து ஆதி மகாலட்சுமி பராசக்தி மூகாம்பிகா வாக அத் திருத்தலத்தில் கோயில் கொண்டாள். அதுவே மூகாம்பிகை என்று அழைக்கப்படுகிறது. அத்தலம் கொல்லூரில் உள்ளதால் அத்தலத்திற்கு கொல்லூர் மூகாம்பிகை என்று பெயர் வந்தது.
இதுவே கொல்லூர் மூகாம்பிகை திருக்கோயில் தோன்றியதற்கான வரலாறு.
இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி
நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.
Comments
Post a Comment