கட்டீல் துர்க்கை அம்மன் ஆலயம் வரலாறு

தெரிந்த கதை தெரியாத வரலாறு

இன்று நாம் காண இருப்பது கர்நாடக மாநிலத்தில் மங்களூரில் இருந்து பத்து இருபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கட்டீல் துர்க்கை ஆலயத்தின் வரலாறு.

இது மங்களூரிலிருந்து ஒரு இருபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயம் .இது எவ்வாறு தோன்றியது. இதன் வரலாறு என்ன என்பதை சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா.

ஒருமுறை உலகத்தில் மழையே இல்லாமல் பூமி வறண்டு போய் மிகவும் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். அப்போது ஜாபாலி மகரிஷி உலக நலனுக்காக கடும் தவம் மேற்கொண்டார். அச்சமயம் வேண்டியதையெல்லாம் கொடுக்கும் காமதேனு அவசியம் தேவை என்று உணர்ந்து தேவலோகம் சென்று இந்திரனிடம் காமதேனுவை பூலோகத்திற்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.

அப்பொழுது தேவேந்திரன் அவரிடம் தாங்கள் உலகத்தின் நன்மைக்காக செய்யும் யாகத்தின் பொருட்டு அனைத்து உதவிகளையும் நான் செய்யத் தயாராக இருக்கிறேன் .ஆனால் தற்சமயம் வருணலோகத்தில் ஒரு யாகம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதற்காக நான் காமதேனுவை அனுப்பி இருக்கிறேன். காமதேனுவின் மகளான கன்றுக்குட்டி நந்தினியை தங்களுடன் அனுப்புகிறேன். உலகத்தின் பஞ்சத்தைப் போக்க  அது உதவி புரியும் என்று கூறினார். ஆனால் பூலோகத்தில் சுயநலமும் கபடமும் நிறைந்து காணப்படுவதால் நான் அங்கு செல்ல மாட்டேன் என்று  பசு நந்தினி கூறிவிட்டாள்.

அதைக் கேட்டு மிகவும் கோபம் அடைந்த ஜாபாலி மகரிஷி நந்தினியைப்  பார்த்து நீ பூலோகத்தில் வந்து பிறப்பாயாக என்று சாபம் கொடுத்தார். அந்த சாபத்தை கேட்டு மிகவும் வருத்தமுற்று நந்தினி பராசக்தியிடம் சென்று தனக்கு வாழ்வளிக்குமாறு  வேண்டிக் கொண்டாள். அப்போது ஜகன்மாதா நீ பூவுலகில் போய் பிறப்பதற்கு அஞ்ச வேண்டாம். நீ நல்லவளாக இருப்பதால் உன் சகவாசத்தால் மற்றவர்களும் நல்லவர்களாக மாறிவிடுவார்கள். மேலும் நீ பூலோகத்தில் ஒரு நதி வடிவத்தில் ஓடிக்கொண்டிரு. நான் சீக்கிரமே வந்து உன் மத்தியில் தோன்றுவேன். எனக்கு மிகவும் முக்கியமான ஒரு பணி  பூலோகத்தில் இருக்கிறது என்று பராசக்தி நந்தினியிடம் கூறினார்.

அப்போது பூலோகத்தில் அருணாசுரன்  என்ற அசுரன் பல கொடுமைகள் செய்து கொண்டிருந்தான் .சும்ப நிசும்ப வதத்தின்போது தலைமறைவாக இருந்த இவன் காயத்திரி மந்திரத்தாலும் கடும் தவத்தாலும் மிகவும் வலிமை அடைந்து பிரம்ம தேவனிடமிருந்து சிரஞ்சீவி வரம் பெற்றான். மனிதனாலோ பறவையினாலோ  நீரில் வாழும் உயிரினங்களாலோ தனக்கு அழிவில்லை என்று வரத்தைப் பெற்ற பிறகு ரிஷிகளுக்கும் மக்களுக்கும் அநேக தொல்லைகளை கொடுத்து கொண்டிருந்தான். அனைவரும் சென்று மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார்கள். ஸ்ரீமகாவிஷ்ணு பார்வதிதேவியை சென்று வதம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

உடனே பார்வதிதேவி மிகவும் அழகிய ரூப சுந்தரி உருவம் தாங்கி அவன் முன்னால் தோன்றிகனாள்.அவளது அழகில் மயங்கிய அருணாசுரன் தேவியைப் பின்தொடர்ந்து சென்றான்.உடனே பார்வதிதேவி நந்தினி நதியின் மத்தியில் இருந்த பாறை ஒன்றின் பின்புறம் சென்று மறைந்துவிட்டார்.
தேவியை காணாமல் கோபம் கொண்டு தன் வாளை எடுத்து  அந்த பாறையை இரண்டாக பிளந்தான்.அப்போது தேவி பிரமரமாக அதாவது வண்டாக உருவெடுத்து அசுரனைக் கொன்று பிரமராம்பிகையாக அங்கே அமர்ந்தாள்.(பிரமரம்__வண்டு)

ஆதலால் இந்த தேவிக்கு இங்கு பிரமராம்பிகை என்ற பெயரும் உண்டு. மேலும் அருணாசுரனை வதம் செய்ததால் இங்கு அரணாசுர மர்த்தினி என்ற பெயரும் உண்டு. மேலும் நந்தினி நதியின் மத்தியில் தோன்றியதால் இந்த இடம் கட்டீஸ் என்றும் பெயர் பெற்றது. நந்தினி நதியின்"" கடி"" யில் கடி என்றால் மத்தியில் என்று அர்த்தம். நந்தினியின் கடியில் தோன்றியதால் கட்டீஸ்  என்று பெயர் பெற்றது.

இதுவே துர்க்கை கட்டீல் தோன்றியதற்கான வரலாறு.

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்