ஜெய்ப்பூர் அரண்மனை மற்றும் உஜ்ஜைனி கோயில் வரலாறுகள்
தெரிந்த கதை தெரியாத வரலாறு
நான் கடந்த மாதம் 25ஆம் தேதி பொள்ளாச்சியில் இருந்து கிளம்பி ஜெய்ப்பூர் அரண்மனை ஹவா மஹால் பிங்க் சிட்டி அடுத்துள்ள புஷ்கரம் ஓங்காரேஷ்வரர் காலகாலேஸ்வரர் ஹரிசித்தி மாதா கோவில் செவ்வாய் பிறந்த இடம் விக்ரமாதித்தன் தவம் செய்த குகை வேதாளம் பிறந்த குகை காளி கோயில் விக்கிரமாதித்தனுக்கும் காளிதாசனுக்கும் காட்சி தந்த காளி கோயில் முதலியன. ஒவ்வொன்றாக தற்போது அதைப் பற்றிய விபரங்களை சற்று விரிவாக விளக்கமாக காண்போமா.
1. ஜெய்ப்பூர் அரண்மனை ஹவா மஹால்.
ஜெய்ப்பூர் அரண்மனையின் தற்போதைய ராஜா பதம்நாத்சிங். இந்த அரண்மனையில் ராஜா இருக்கிறார் என்றால் தேசியக்கொடியுடன் ராஜாவுக்கென்றே என்றே தனிப்பட்ட முறையில் உள்ள ஒரு கொடியும் சேர்ந்து இரண்டு கொடி வானில் பறக்கும் .அதே சமயம் இவர் வெளிமாநிலம் வெளிநாடு சென்று விட்டார் என்றால் இரண்டாவதாக உள்ள கொடி இறக்கப்படும் .இதை வைத்து ராஜா உள்ளூரில் அரண்மனையில் இருக்கிறாரா வெளியூரில் இருக்கிறாரா என்பதை ஊர் மக்கள் அறிந்து கொள்வார்கள்.
மேலும் இந்த அரண்மனைக்கு ஹவா மஹால் என்று பெயர் வந்தது எப்படி என்பதைக் காண்போம் ஆங்கிலேயர் காலத்திலும் அதற்கு முந்திய காலத்திலும் முகமதியர் காலத்திலும் ராஜஸ்தானில் வாழும் பெண்கள் திருமணம் ஆனவர்கள் திருமணமாகாதவர்கள் ஏனைய பிற ஆடவர்களை ஏறெடுத்துப் பார்க்கக் கூடாது அதனால் அவர்கள் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு தனது முகத்தை மறைத்துக் கொள்வார்கள் உலகத்தைப் பார்க்க வேண்டும் என்றால் அரண்மனை மாளிகையில் சிறு சிறு துவாரங்கள் வழியாக நாட்டில் நடப்பதை அவர்கள் பார்ப்பார்கள் காரணம் அவர்கள் வெளியில் எங்கும் போக முடியாது .வேறு எங்கும் செல்லமுடியாது. அந்த துவாரங்கள் வழியாகத்தான் அவர்கள் பார்க்கமுடியும். அத்தனை பெண்டிரும் இளவரசியும் பட்டத்து ராணி களும் தோழிகளும் அந்த அரண்மனையில் உள்ள அனைவரும் அந்த சிறு துவாரத்தின் வழியாக பார்க்கும் பொழுது வெயில் காலத்தில் மிகவும் சூடாக இருக்கும் என்பதால் அந்தக் காலத்திலேயே இயற்கை முறையில் குளிர்ச்சி ஊட்டக்கூடிய சில சாதனங்களை அந்த அரண்மனையில் பதித்திருக்கிறார்கள்.ஹவா என்றால் காற்று மஹால் என்றால் மாளிகை அரண்மனை. காற்று குளிர்ந்த காற்று உள்ள அரண்மனை. இயற்கையாகவே பெண்களுக்கு என்று கட்டி இருப்பதால் அந்த அரண்மனைக்கு ஹவா மஹால் என்று பெயர் ஏற்பட்டது .ஜெய்பூர் பற்றிய விளக்கம் போதும் என்று நினைக்கிறேன் மேற்கொண்டு அடுத்த கோயிலைப் பற்றி பார்ப்போம்.பிங் city என்றால் 1728 ஆம் வருடம் அப்போதைய ராஜாவால் நகரம் முழுதும் ஒரே பெயிண்டால் அனைத்து கோபுரங்கள் மாடமாளிகைகள் அனைத்தும் உருவாக்கப்பட்டது 300 வருடங்கள் ஆகியும் இன்றும் மாறாமல் இருப்பது அந்தப் பெயிண்டிற்கு எடுத்துக்காட்டாகும் .அது ஒரே நிறத்தால் பிங் நிறத்தால் உருவாகியதால் அந்த நகரத்திற்கு பிங்க் சிட்டி என்ற பெயர் ஏற்படலாயிற்று.
2. ஓம்காரேஸ்வரர்.
12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்று நர்மதை ஆற்றின் ஒருபுறத்தில் ஓம்காரேஸ்வரர் மறுகரையில் மமலேஸ்வரர் உள்ளனர். இரண்டும் ஒன்றே .இரண்டும் ஒன்று சேர்ந்து ஒரே ஜோதிர்லிங்கமாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. மம ஈஸ்வர் .நான் கடவுள் . அகம்பிரம்மாஸ்மி என்ற தத்துவமே மமலேஸ்வரர்.
3.காலகாலேஸ்வரர்.
12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று. இது சுயம்புவாகத் தோன்றியது என்று அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். வட நாட்டிலுள்ள ஜோதிர்லிங்கங்கள் அனைத்தையும் நாம் தொட்டு அர்ச்சனை அபிஷேகம் ஆராதனை செய்யலாம்.
4. ஹரிசித்தி மாதா கோவில்
இந்தக் கோவிலின் விசேஷம் என்னவென்றால் ஒவ்வொரு நாளும் இரவு ஆறரை மணிக்கு மேல் 7 மணிக்குள் உள்ள இரட்டை கோபுரத்தில் ஏறி முதலில் ஏற்றிய தீபங்கள் அனைத்திலும் உள்ள குப்பை கூளங்களை களைந்து எண்ணெய் ஊற்றி திரி வைத்து ஏழு மணியாகும் போது இரண்டு கோபுரங்களையும் ஜே ஜே என்று தீப்பந்தத்தை எரிய விடுவார்கள் இது உலக மகா பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இதனுடைய வீடியோவை இத்துடன் இணைத்துள்ளேன்.
மற்றவர்கள் அறிந்து கொள்ளாத விஷயங்களையும் நான் சற்று நோண்டி துருவி ஆராய்ந்து தெரிந்து கொண்டேன். என்னவென்றால் அவர்கள் தீப்பந்தத்தை அருகில் கொண்டு செல்லும் பொழுதே தீ பற்றிக்கொள்கிறது .அது எவ்வாறு என்று ஆராய்ந்து அங்குள்ளவர்களிடம் விசாரித்துத் தெரிந்து கொண்டேன்.அது என்னவென்றால் எண்ணெயுடன் சிறிது மண்எண்ணையும் கலக்கிறார்கள் என்று அறிந்து கொண்டேன். இது நம்பர் ஒன். இரண்டாவது திரிஉண்டாக்கும் பொழுது கற்பூரத்தை பொடி செய்து திரியின் இடையே கலந்து உண்டாக்குகிறார்கள். மண்எண்ணையும் கற்பூரமும் சேர்ந்து கொள்வதால் தீப்பந்தத்தை அருகில் கொண்டு செல்லும்போது அது பற்றிக் கொள்கிறது வீடியோவை காண்பவர்கள் அதை நன்கு உணரலாம்.
5.செவ்வாய் பிறந்த இடம்.
நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய் எனப்படும் அங்காரகன் பிறந்த இடம் இதுவாகும். செவ்வாய்க்கு என்றே தனி கோயில் சன்னதி இங்கு உள்ளது.
6. விக்ரமாதித்தன் தவம் செய்த குகை.
விக்கிரமாதித்தனுக்கும் பட்டிக்கும் காளிதாசனுக்கும் காட்சி தந்த காளி மாதா கோயில் இது.இங்கு காளிமாதா உக்கிரத்துடன் நாக்கை தொங்க போட்டு கொண்டு இருக்கிறாள் இந்த குகையினுள் நுழைவது என்பது நாம் தவழ்ந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மிகவும் சிறிய வளைந்து நெளிந்து செல்லக்கூடிய குகை.
7.வேதாளம் பிறந்த இடம்.
இந்த வேதாளம் கோயிலில் உள்ள வேதாளத்தை பார்வதி தேவியே பிரதிஷ்டை செய்ததாக அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள் .ஒரு மரத்தின் அருகில் வேதாளத்தை பிரதிஷ்டை செய்ததாகவும் அந்த வேதாளம் தான் தற்போது வரை அங்கு உள்ளதாகவும் கூறுகிறார்கள் இதுவே வேதாளத்தின் குகையாகும்.
8. Last but not the least என்று கூறுவதுபோல்.
புஷ்கர் அதைப் பற்றி சற்று கூறுகிறேன்.
இந்தப் புஷ்கரத்தைப் பற்றி விரிவாக விளக்கமாக நாளை கூறுகிறேன் .பதிவு சற்று நீண்டு விட்டதால் வேறு வழியில்லாமல் நான் இத்துடன் முடிக்க வேண்டிய நிலையிலுள்ளேன். காரணம் புஷ்கரம் அல்லது புஷ்கரணி பிரம்மா தவம் செய்த இடம் கஜேந்திர மோட்சம் நடந்த இடம் காமதேனு உருவான இடம் காயத்திரி தேவி உருவான இடம் சரஸ்வதிதேவி உருவான இடம் சாவித்திரி தேவி பிரம்மாவிற்கு சாபம் கொடுத்த வரலாறு பிரம்மாவிற்கு பூலோகத்தில் கோயில் இல்லாமல் போனதற்கானவரலாறு. மேலும் பிரம்மாவின் ஐந்தாவது தலையை சிவன் கொய்த வரலாறு அனைத்தும் அடங்கும். அனைத்தையும் விரிவாக விளக்கமாக கூற வேண்டும் என்பதால் மட்டும் நாளை கூறுகிறேன்.
இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி
நாளை புஷ்கரணி என்று கூறப்படும் புஷ்கர் வரலாற்றை விரிவாகப் பார்ப்போம்.
Comments
Post a Comment