மூத்தோர் கஷ்டம் வயதானவர்கள் வரலாறு
நண்பனுடன் அவனது வீட்டிற்குச் சென்றிருந்தேன்..
வாசலில் அவனது பாட்டி கயிற்றுக் கட்டிலில் கிடந்தார்..
நண்பன் உள்ளே போய்விட்டான்..
நான் : என்ன பாட்டி நல்லா இருக்கிங்களா..?
பாட்டி : நல்லாருக்கேன் ராசா.. நீ ராசா..?
நான் : நல்லாருக்கேன் பாட்டி..
இடையே எனது Android தொலைபேசி அழைத்தது, பேசி முடித்தேன்..
பாட்டி : என்னாய்யா அது டிவி பொட்டி கணக்கா..?
நான் : இதுவா பாட்டி.. இது புதுசா வந்துருக்குற ஃபோனு..
சட்டென்று ஞாபகம் வந்தவனாய் அதிலிருந்த Talking Tom-ஐ எடுத்துக்காட்டினேன்..
பாட்டி இதுகிட்ட பேசினா அத அப்புடியே திரும்ப பேசும்..
பாட்டி : என்ன ராசா சொல்றே..?
Talking Tom :என்ன ராசா சொல்றே..?
நானும், பாட்டியும், Talking Tomமும் சிரித்தோம்..
பிறகு வீட்டினுள் சென்றேன்..
எல்லோருடன் பேசிவிட்டு வெளியில் வந்தேன்...
வாசலில் பாட்டி.. நான் : போயிட்டு வாரேன் பாட்டி..
பாட்டி : ராசா... நான் : என்னா பாட்டி..?
பாட்டி : ஏய்யா, அந்த பூனகுட்டிய இங்க உட்டுட்டு போயா..
நான் : என்ன பாட்டி சொல்றீங்க..?
பாட்டி : ஆமாய்யா.. இந்த வயசான காலத்துல இங்க எங்கிட்ட யாருமே பேச மாட்றாங்கயா..நா செத்துபோறப்ப
அந்த பூனகுட்டி கிட்டயாச்சும் பேசிட்டே சாவுறேன்யா..
#வீட்டில்உள்ளமுதியோர்களிடமூம்பேசநேரம் ஒதுக்குங்கள், அவர்கள் #உணர்வுகளுக்கும் மதிப்பளியுங்கள்
Comments
Post a Comment