சேலை கட்டும் பெண்னை நம்பாதே

தமிழ் பழமொழி
சேலை கட்டும் பெண்ணை நம்பாதே
அறிந்த விளக்கம் :
சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பெண்களை பிடிக்காத ஒருவர் ஒரு கால கட்டத்தில் கோபமாய் சொல்லிவிட்டு போனதாக கூட எடுத்துக் கொள்ளலாம் என்கின்றனர் சிலர். நிச்சயம் நாகரீக காலகட்டட்துக்கு பின்னால்தான் என எடுத்துக் கொள்ள வேண்டும். ( சேலை கட்டுற பொண்ணை, ஜீன்ஸ் போடற பொண்ணை , சுடி போடற பொண்ணை நம்பலைன்னா வேற யாரை தாங்க நம்பறது ஆனால் உண்மையான பழமொழி அதுவல்ல..
அறியாத விளக்கம் :
சேல் + ஐ அகட்டும் பெண்ணை நம்பாதே என்பது இந்த பழமொழியின் உண்மையான வடிவம். சேல் என்பது கண் விழியை  குறிக்கிறது. எப்போதும் விழிகளை பரபரப்பாய் அலைபாய விடும் குணாதிசயம் உள்ள பெண்கள் தப்பான ,குணத்தை கொண்டிருப்பார்கள் ( உள்ளத்தின் கதவுகள் கண்களடா.. ) எனவே அந்த குணமுடைய பெண்களின்  குணாதிசயங்களை அவர்கள் கண்ணிலிருந்தே கண்டுபிடித்து விடலாம். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி நாளடைவில் திரிந்து இப்படியாகி விட்டது.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்